Tuesday, 18 August 2020

ரெஸ்கூ ரெமடி-Rescue Remedy

அனைத்து வீடுகளிலும் இருக்க வேண்டிய அற்புத மலர் மருந்து !

ஆபத்து கால நண்பன் ரெஸ்க்யூ ரெமடி!
இந்த மருந்து அவசரகால உதவி மருந்து !
 
1930 களில் லண்டனை சேர்ந்த அலோபதி மருத்துவர் டாக்டர் எட்வர்ட் பாச் அவர்களால் கண்டுபிடிக்கபட்ட மலர் மருந்துகளில் அற்புதமான ஒன்று ரெஸ்க்யூ ரெமடி! (Rescue Remedy) கலவை.

திடீரென ஒரு விபத்து அல்லது எதிர்பாராத அதிர்ச்சி தரும் செய்தி போன்றவற்றால் ஏற்படும் மோசமான பாதிப்புக்கு உடனடி நிவாரணம் தான் இந்த ரெஸ்க்யூ ரெமடி!

38 மலர் மருந்துகளில் ஐந்து மலர்களின் கலவை இது.

1.ஸ்டார் ஆஃப் பெத்லஹேம் (Star of Bethlehem) For Shock நம்மை அதிர்ச்சியில் இருந்து காக்கும்

2.ராக் ரோஸ் (Rock Rose) For terror and panic பயம் , பீதியை குறைக்கும்

3.இம்பேஷன்ஸ் (Impatiens) For mental stress and tension பதட்டத்தை தணிக்கும்

4.செர்ரி ப்ளம் (Cherry Plum) For Uncontrollable fear வலி,எரிச்சல் பொறுக்கமுடியாமையை சரி செய்யும்

5.க்ளமேடிஸ் (Clematis) loss of consciousness நமக்கு என்ன ஆகுமோ என்ற எதிர்கால பயத்தை நீக்கி சுயநினைவில் நிலைக்க வைக்கும்

ஆகிய ஐந்தும் கலந்து செய்யப்படுவது ரெஸ்க்யூ ரெமடி!

டாக்டர் பாச்  இந்த அவசரகால மருந்தை எப்போதும் கை வசம் வைத்திருப்பர். 

இன்று உலகில் ஏராளமானோர் இதைக் கைவசம் வைத்திருக்கின்றனர்

ரெஸ்க்யூ ரெமடியின் பயன்பாடு

👉விபத்து , விஷக்கடி, திடீர் மயக்கம், அடிபட்டு ரத்தம் வெளியேறுதல் மற்றும் இதய படபடப்பு போன்ற அனைத்து அவசர சிகிச்சைக்கும் பயன்படுத்தலாம்.

👉பக்கத்து வீட்டில் ஒரு சம்பவம் ஏற்பட்டாலும் நமக்கும் வந்துவிடுமோ என்ற பதட்டத்தை முற்றிலும் தடுக்கும் 

👉அதிர்ச்சியில் உறைந்த யாருக்கேனும் இதைக் கொடுத்து உடனடியாக சகஜ நிலைக்கு திருப்பலாம்.

👉தாளாத துக்கம், திடீரென்று வரும் துயரச் செய்தி அதிலிருந்து மீள இதைப் பயன்படுத்தலாம்

👉இதை வெளிக் காயங்களுக்கும் மருந்தாகக்  மேலே பயன்படுத்தலாம்

👉தினமும் காலை ஒருமுறை ரெஸ்க்யூ ரெமடி எடுத்துக்கொண்டால் அன்றைய நாள் முழுவது மனம் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதை உணரலாம்.

👉இன்றைய பதட்டம் நிறைந்த சூழலின் அனைவரின் கையிலும் இருக்க வேண்டிய அற்புத மலர் மருந்து இந்த ரெஸ்க்யூ ரெமடி.

♦️இந்த மருந்து எல்லா ஹோமியோபதி கடைகளிலும் கிடைக்கும்.

♦️திரவமாகவோ அல்லது சிறிய சர்க்கரை உருண்டைகளாகவோ(globules) கிடைக்கும்.

♦️இது மலர்களில் இருந்து எடுக்கப்படும் எசன்ஸ் என்பதால் எந்த பக்கவிளைவுகளும் இல்லை. ( எடுத்துக்காட்டு ரோஸ்வாட்டர் போன்று)

♦️பாதிக்கபட்டவருக்கு 10 துளி 100ml தண்ணீரில் கலந்து கொடுக்கலாம்.

♦️மயக்கநிலையில் இருப்பவருக்கு அவர் முகத்தில் தெளித்தாலும் உடனே வேலை செய்யும்.

♦️தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் 3 துளி மருந்தை உதட்டில் தடவினால் போதும்.

♦️சர்க்கரை உருண்டை வடிவில் ரெஸ்க்யூ ரெமடி இருந்தால் 5 சிறிய மாத்திரை உருண்டைகளை(globules) வாயில் வைத்து உமிழ்நீருடன் கலந்தாலே போதும்.

மேலும் விவரங்களுக்கு
👇👇👇👇👇👇
https://greatenergy.in/flowers/contact.html

No comments:

Post a Comment