23.07.21
மலர் மருந்துகள் பற்றி சரியாக மற்றும் முழுமையாக கற்றுக்கொள்ளுங்கள்.
சாலையில் செல்கிறீர்கள். ஒரு டிபன் ஹோட் டல் முன்பு நின்று கொண்டு 'எனக்கு இரண்டு இட்லி கொண்டு வா' என்கிறீர்கள். கையில் காசை நீட்டி காண்பிக்கிறீர்கள்.
அவன் கொண்டு வந்து கொடுப்பானா?
ஹோட்டலின் உள்ளே சென்று அங்கு நமக் போடப்பட்டிற்கும் நாற்காலியில் முன்பு காக உட்கார்ந்து கேட்டால்தான் இட்லி கொண்டு வருவான். அதாவது வாடிக்கையாளராக நடந்து நீ டிபன் ஒரு கொள்ள, அந்த ஹோட்டல் உள்ளே சென்று உட்காரவேண்டும்.
உன்னிடம் ஒருவன் இரண்டு லட்சம் கடனாக வாங்கி திருப்பித்தராமல் டபாய்க்கிறான். ஏமாற்று கிறான். இதற்கு அவன் காரணமில்லை. நீதான் காரணம். ஏன் திருப்பித்தரமாட்டேன் என்கிறான் எனில் நீ இந்த சமுதாயத்தில் (மனதளவில்) ஒரு அங்கமாக இல்லாமல் இருப்பதால் அவன் உன்னை ஓரங்கட்டி விடுகிறான். (Excommunicated, excommunication).
சாலையில் ஒருபுறத்தில் நின்றுகொண்டு எதிர் சாரியில் உள்ள ஹோட்டலில் உள்ள சர்வரை கூப்பிட்டால் அவன் உன்னை கண்டு கொள்ள மாட்டான். அதாவது உன்னை அந்த ஹோட்டல் வேலையாள் 'நிராகரிக்கிறான்'. ஹோட்டலின் உள்ளே சென்று ஒரு டேபிள் முன்பு நீ உட்கார்ந் தால் மட்டுமே உன்னை ஒரு வாடிக்கையாளராக அவன் உன்னை 'அங்கீகரிக்கிறான்'.
அதேபோல் சமுதாயம் என்ற ஹோட்டலில் நீ அங்கீகரிக்கப்பட, நீ இந்த சமுதாயத்தில் ஒரு அங்கமாக (மனதளவில்) மாற வேண்டும். இலட் சக்கணக்கில் பணம் ஏமாற்றப்பட்ட நபர்களின் மனக்கண்ணோட்டத்தைப் பாருங்கள். இந்த சமுதாயத்தில் உள்ள மற்றவர்களின் மீது வெறுப்பு (hatred) இருப்பதால் நீ மனதளவில் இந்த சமுதாயத்தில் ஒட்டாமல் இருப்பதால் உனக்கு அங்கீகாரம் கிடைக்காமல் போய் நீ ஓரங்கட்டப் படுகிறாய். கடன் வாங்கியவன் தவறு அல்ல. உனது தவறு.
சமுதாயம் உன்னை நிராகரிக்காமல் உன்னை சமுதாயத்தில் ஓர் அங்கமாக ஏற்றுக் கொள்ள, மதிப்பு கொடுக்க, ஹால்லி சாப்பிட்டுப் பார். அவன் உன்னிடம் வாங்கிய பணத்தை ஓடோடி வந்து கொடுப்பான்.
உண்மையை சொல்ல வேண்டுமானால் நாம்
இதை வேறுவிதமாக பார்க்க வேண்டும். இனி
நான் எழுதுவது பலருக்க பிடிக்காமல் போகலாம். ஆனால் ஹால்லி என்ற மலர் 'திருந்துங்கடா’ என்று சொல்கிறது.
உன்னிடம் இரண்டு இலட்சரூபாய் கடனாக கொடுக்க இருக்கிறது என்றால் இந்த பணம் திரும்பிவராமல் இருந்தாலும் கூட நீ பட்டினி கிடக்கப் போவதில்லை என்றால் அந்த பணம் திரும்ப வந்தால் என்ன, வராவிட்டால் தான் என்ன.
நமது தேவைக்கு அதிகமாக உள்ள பணத்தை (பெரிய மழை வந்தால் அடித்துச் செல்லும்) குடிசையில் உள்ளவனுக்கு ஒரு சிறிய நிரந்தர வீடு கட்டிக் கொடுக்காமல் அந்த பணத்தை நம்மிடமே வைத்துக் கொள்வதால் அந்த பணத்தால் என்ன பயன்?
(1) பைபிளில் ஒரு வாக்கியம் காணப்படுகிறது; Lend and do not expect back. 'கடன் கொடு, திரும்ப கொடுப்பான் என்று எதிர்பார்க் காதே.'
(2) இந்து சாஸ்திரத்தில் வேறு விதமாக காணப் படுகிறது: திருடனுக்கு தங்கத்தை கொடு.
மேற் சொன்னபடி எந்த கிறிஸ்துவரோ, இந்து வோ எங்காவது நடந்து கொள்கிறார்களா? ஆக இவர்கள் தன்னை கிறிஸ்துவன் என்றோ, இந்து என்றோ சொல்லிக்கொள்ள அவமானப்படவேண்
டும். முதலில் மனிதனாக (அதாவது இந்த சமு தாயத்தில் ஒரு அங்கமாக, மனிதாபிமானம் உள்ள வனாக) இரு. அதன்பின்பு உன்னை கிறிஸ்துவன், இந்து என்று பறை சாற்றிக் கொள். மழையில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் குடிசையில் உள்ளவர்களுக்கு நான்கு (சிறிய) நிரந்தர வீடு கட்டிக் கொடுக்கக்கூடிய அளவு 50 இலட்சம் உள்ளவன் அவ்வாறு செய்யாமல் பென்ஸ்கார் வைத்திருக்கிறான் என்றால் இவன் தான் ஏழ்மை யை, ஏழைகளை உருவாக்குகிறான். ஏழைகளை மனிதர்களாக அங்கீகாரம் செய்ய மறுக்கிறான். எல்லா மதங்களுமே நாம் எல்லோருமே கடவுளின் குழந்தைகள் என்று சொல்கின்றன. எந்த மதத்தி லும் இல்லாதவன் தான் பென்ஸ் கார் வைத் திருப்பான். ஒருவன் தான் எந்த மதத்தையும் சார்ந்தவன் இல்லை என்றால் அவன் சொர்க்கத்தின் கதவுகளை அடைத்து விட்டவன் ஆகிறான் என்று எமர்சன் சொல்கிறார்.
நீ ஒரு பெரிய டிபார்ட்மென்ட் ஸ்டோர் வைத்து நடத்துவது தவறல்ல. ஆனால் அதில் கிடைக்கும் எல்லா இலாபத்தையும் நீயே ஆடம்பர மாக செலவு செய்து அனுபவிக்கவேண்டும் என்று நினைத்தால் நீதான் திருடன், ஏமாற்றுப் பேர்வழி.
(மற்ற மனிதர்கள் மீது) வெறுப்பு; hatred ஹால்லி
நிறைய படிப்பு, திறமை, அனுபவம் இருந்தும் வேலை கிடைக்கவில்லையெனில் ஹால்லி கொடுத் துப் பார். மறுதினமே வேலை கிடைத்துவிடும்.
நீ வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த சமுதாயத் தில் உள்ளவர்களை வெறுத்து ஒதுக்கினால், இந்த ஒட்டுமொத்த சமுதாயமுமே உன்னை புறக்கணித்து விடும்.
ஒருவேளை முழு சாப்பாடு கிடைக்காத ஏழை களுக்கும் ஹால்லி கொடுத்துப்பார்.
பலர் வந்து அவர்களுக்கு உதவுவர். ஏழ்மை யை ஒழிக்க-ஹால்லி.
ஒருவன் ஏழையாக இருப்பதற்கு காரணம் அவனுக்கும் மனதில் பணக்காரர்களை பார்த்து பொறாமை; இதனால் வெறுப்பு ஏற்படுவதே காரணம்.
நமது ஒட்டுமொத்த சமுதாயம் உய்வதற்கு நாம் எல்லோருமே ஹால்லி சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.
ஒரு தொழிற்சாலை நடத்த நிறைய பணம் தேவைதான். ஆனால் அந்த தொழிற்சாலையை நடத்தும் முதலாளி அதில் வரும் இலாபம் முழு வதையும், தானே அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பதுதான் தவறு.
முந்தைய இரண்டு பாகங்களில் ஆந்திரா கோடீஸ்வரர், பெண் திருமண பத்திரிக்கை கொண்டு வரும் ஏழைகளுக்கு செட்டாக நகைகள் கொடுத்ததையும் பாகம் 45-ல் விவரிக்கப்பட்ட கோவை சாந்தி கியர்ஸ் சுப்ரமணியனைப் பற்றி மீண்டும் ஒரு முறை படியுங்கள். மனிதனாக (இந்த சமுதாயத்தில் ஒரு அங்கமாக) இருக்க நாம் எல்லோரும் முயற்சி செய்வோம். அப்போதுதான் நீ மற்றவர்களால் (ஏன், கடவுளால் கூட) நிராகரிக்கப் படாமல் கொள்ளும். சொர்க்க வாசல் உனக்கு திறந்து
நீ மற்றவர்களை உயர்த்தினால், கடவுள் உன்னை உயர்த்துவார். ஏழ்மையை உண்டாக்காதே.
பணக்காரன், ஏழை எல்லோரும் ஹால்லி சாப்பிட கொலை, கொள்ளை, விமானக் கடத்தில் வீட்டில் திருட்டு போன்றவை நடக்காது, நடக்க வே நடக்காது.
மேலை நாடுகளைப் பார்த்து நாமெல்லோரும் திருந்துவோமாக! அமெரிக்காவில் காரில் சென்று ஒரு கடைக்குள் செல்லும்போது காரைப் பூட்டி சாவியை கையில் எடுத்துச் செல்லாமல் சாவியுட னேயே காரை விட்டு செல்வர். பலர் வீட்டைப் பூட்டிச் செல்வது கூட இல்லை இதற்கு காரணம் அவர்கள் மனிதர்களாக, அதாவது மற்ற எல்லா மனிதர்களையும் மனிதர்களாக 'மதிக்கிறார்கள்’.
உதாரணத்திற்கு நடக்கும் எழுதுகிறேன். ஒரு இங்கு அமெரிக்காவில் விஷயத்தை திரும்பவும்
மதியம் சாப்பாட்டிற்கு ஹோட்டலில் சாப்பிட ஐந்து நண்பர்கள் வருகின்றனர். "ஐந்து நபர்கள், ஏழு டோக்கன்” என்று சொல்லி ஏழு சாப்பாட்டிற் கான பணத்தை கொடுக்கின்றனர். ஹோட்டல் காரன் ஏழு டோக்கன்களை எடுத்து அதில் ஐந்து டோக்கன்களை கொடுத்துவிட்டு மீதி இரண்டு டோக்கன்களை ஒரு டப்பாவில் போட்டு வைக் கிறார். சிறிது நேரம் கழித்து ஒரு ஏழை வந்து 'இலவச டோக்கன் இருக்கிறதா?' என்று கேட்ட வுடன் அந்த ஹோட்டல்காரர் அந்த டப்பாவில் உள்ள இரண்டு டோக்கன்களில் ஒன்றை எடுத்து கொடுக்கிறார்.
இலவச சாப்பாடு சாப்பிடும் அந்த ஏழைக்கு யார் கொடுத்தார் எனபதும் தெரியாது. அந்த பணக்கார ஐந்து நபர்களுக்கும் எந்த இரு நபர்கள் அவர்கள் பணம் கொடுத்த டோக்கனை வாங்கி சாப்பிட்டார் என்பதும் தெரியாது. வலதுகை கொடுப்பது இடது கைக்குக்கூட தெரியக்கூடாது என்று தானம் செய்பவர்கள் கடைப்பிடிக்கிறார்கள். நம்மூரிலும் ஏன் இந்த கலாச்சாரத்தை நாமெல் லோரும் பின்பற்றக் கூடாது ? இப்படிச் செய்வதால் நம் நாட்டிலும் ஏழ்மை ஒழிக்கப்பட்டுவிடுவதால் இங்கிருந்து எவரும் பணம் சம்பாதிக்க அமெரிக்கா
சென்று குளிரில் கஷ்டப்படாமல் இங்கிருந்த படியே அந்த பணத்தை சம்பாதித்துவிடலாம். செய்வோமா? செய்யலாமா?
ஹால்லி என்ற மலர் மனிதர்களை சரியான திசையில் அழைத்துச் செல்கிறது. நாமெல்லோரும் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த
கடவுளின் குழந்தைகள் தான்.
வெற்றிமேல் வெற்றி உன்னை வந்து சேர. ஹால்லி (+வைல்டு ஓட் +எல்ம்) + ஆலிவ் + வால்நட்.
Help others (in need) with your excess wealth and God will be by your side. This is true worship. வறுமையில் கஷ்டப்படுபவர் களுக்கு நீ உதவி செய்தால் கடவுள் உன் அருகிலேயே இருப்பார்.
Contd:
No comments:
Post a Comment